திருமதி நடராஜா யோகம்மா – மரண அறிவித்தல்
பிறப்பு : 11 ஓகஸ்ட் 1930 — இறப்பு : 24 யூன் 2018
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகம்மா அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(இரத்தினபுரி மனோன்மணி ஸ்ரோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவராஜா, கனகராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்தையா, கந்தையா மற்றும் கனகமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, மனோன்மணி, சபாரெத்தினம், வைரவநாதன், நாகம்மா மற்றும் சீதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புச் சகலியும்,
சாரதா, வசந்தி, வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷர்மிலா, கஸ்தூரி, நிரோஜ், நிருபன், நிருசா, சகானா, சாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கனகராஜமணி அவர்களின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தேவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447766051054
பஞ்சன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323840324
காந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444014775