திருமதி ஜெகதீஸ்வரி வேலாயுதம் – மரண அறிவித்தல்
இறப்பு : 9 யூன் 2018
யாழ். மல்லாகம் புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி வேலாயுதம் அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கௌசல்யா, ராதா, ஜெயமோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விவேகானந்தன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குசலகுமாரன், ரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாரங்கன், நீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பொறளை Supreme மலர்ச்சாலையில்(ஜயரத்ன மலர்ச்சாலைக்கு அருகில்) காலை 08:00மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்