செல்வி புஸ்பாவதி செல்வநாயகம் – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற ஆசிரியை- மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி)
தோற்றம் : 31 ஓகஸ்ட் 1929 — மறைவு : 27 மே 2018
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பாவதி செல்வநாயகம் அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்வநாயகம் மங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மகளும்,
பத்மாவதி, Dr. செல்வேந்திரன்(அவுஸ்திரேலியா), அரிச்சந்திரன்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற லோகதாசன், பேரின்பநாயகம்(ஓய்வுபெற்ற D.I.G), லோகேந்திரராணி, தயாநிதி, காலஞ்சென்ற புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோகேந்திரராணி- பாலசிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14163356210
மாலதி- பாலசிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16473827578
பேரின்பநாயகம் — இலங்கை
தொலைபேசி: +94112597043
தயாநிதி சிறிஸ்கந்தராஜா — இலங்கை
தொலைபேசி: +94112362880