திரு கனகசபை ரவீந்திரன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 24 யூன் 1961 — இறப்பு : 22 மே 2018
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ரவீந்திரன் அவர்கள் 22-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நித்தியலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ரதிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுரா, மிதுலா, தனுஜா, சபேசன், கோகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தி, புலேந்திரன், பிரியதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராசா, யோகராணி, தயாபரன், பாக்கியலட்சுமி, புஸ்பராணி, பிரபாகரன், கனகரஞ்சிதம், கிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, பரமலிங்கம், உதயகுமாரி, செவ்வந்திநாதன், சசிரேகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கிருஸ்ணரூபன், பிரஷாந், அபிஷாந்த், சுஸ்மிதா, ஸ்வேதா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஞ்சீதன், சுவாதி, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
திரன் அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் இரம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர், புலேந்திரன்(தம்பி)
தொடர்புகளுக்கு
புலேந்திரன்(தம்பி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447869547380
வீடு — இலங்கை
தொலைபேசி: +94242221631
யோகராசா சுகந்தி(தங்கை) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41333366160