திரு ஆசீர்வாதம் அந்தோணிப்பிள்ளை – மரண அறிவித்தல்
தோற்றம் : 8 ஏப்ரல் 1939 — மறைவு : 2 மே 2018
யாழ். இராஜேந்திரா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், றெஜினா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெரோம், கிச்சி, அன்ரன், வதனா, சியாமளா, சகுந்தலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, சியானா, சகிதா, ஜான்சன், உதயன், றஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
வினோத், யூலியன்
தொடர்புகளுக்கு
வினோத் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783339979