திருமதி பஞ்சாட்சரம் நாகேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி பஞ்சாட்சரம் நாகேஸ்வரி
தோற்றம் : 27 நவம்பர் 1950 — மறைவு : 26 மார்ச் 2018

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் நாகேஸ்வரி அவர்கள் 26-03-2018 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(பிரபல வர்த்தகர்- SPS Agency, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

தயாபரன்(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் பாலசிங்கம், பாலசுப்பிரமணியம், பாலேந்திரன், சந்திரபாலன், ஸ்ரீரங்கநாதன், இராஜேஸ்வரி, தவமுருகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நர்மதா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சண்முகம், தம்பிராசா, பொன்னம்பலம், மகாலெட்சுமி மற்றும் செல்லையா, லோகேந்திரன்(சிவாத்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளதமன், அபிமன், சந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-03-2018 செவ்வாய்க்கிழமை முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
214, பிக்கரிங் வீதி,
கொட்டாஞ்சேனை,
கொழும்பு-13.
 

தகவல்
தயாபரன்(மகன்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112439448

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu