திரு கிருஷ்ணப்பிள்ளை தேவதாஸ்(சோ) – மரண அறிவித்தல்




திரு கிருஷ்ணப்பிள்ளை தேவதாஸ்(சோ) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 23 ஏப்ரல் 1944 — ஆண்டவன் அடியில் : 29 சனவரி 2018

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை மணல் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை தேவதாஸ் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணப்பிள்ளை, பூமணி தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்ற செபமாலை, லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்மலீற்றா அவர்களின் பாசமிகு கணவரும்,

றாஜன்(ஜெர்மனி), ஜெரீனா, ஜெசிந்தா, மகேந்திரன், ஜெனிதா(கனடா), நிமாலினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தி(ஜெர்மனி), ராசன், ஜெகன், செவ்வந்தி, தயா(கனடா), றஞ்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிநயா(ஜெர்மனி), ஆருண்யா(ஜெர்மனி), டர்சனா, டர்சன், டனுஷன், மது, ஜெமிகா, அபிஷன், மகிஷா, அர்ச்சனா(கனடா), அரோசன்(கனடா), ஹர்ணிஹா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-02-2018 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் வெளிச்சவீடு பருத்தித்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றாஜன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917680553819
மகேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768989354
தயா — கனடா
தொலைபேசி: +15144412471
நிமாலினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448732058

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu