திருமதி அருளானந்தம் ஞானபாக்கியம்
மண்ணில் : 13 ஓகஸ்ட் 1932 — விண்ணில் : 8 சனவரி 2018
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தேவிபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் ஞானபாக்கியம் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற பிலோமினா(ராசாத்தி), றோஸ்மரியராணி(மலர்), யசிந்தா தேவராணி(கிளி), அருளானந்தநாயகி(தங்கம்), பிரான்சிஸ் அருள்ஞானரட்ணம், செல்வி அருள்ஞானசீலி(செல்வம்), அருள்மலா, அருள்ஞானசீலன்(சீலன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருச்செல்வம், சுனில், தேவராஜா, காலஞ்சென்ற அசெம்ரா(சுஜாதா), ஜெபக்குமார், வலன்ரைன்(தவம்), தயாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்றோஸ்(ராசம்), சவிரிமுத்து மற்றும் இராக்கினியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றீகன், றெனானடஷ், திஷான், துஷாந், ஜனன்சிஜா, ஜானுகா, ஜொகன்னஸ், ஜிதேப்பிரிதன், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மதுமிதன், கேஷயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தேவிபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மாமூலை புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரான்சிஸ் — நோர்வே
தொலைபேசி: +4791353679
சீலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447549631919
றெனா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779094244