கணபதிப்பிள்ளை குருநாதபிள்ளை – மரண அறிவித்தல்




gurunathapillaiபெயர்: கணபதிப்பிள்ளை குருநாதபிள்ளை
பிறப்பு: –
இறப்பு:2012-12-21
பிறந்த இடம் :கோளாவில்
வாழ்ந்த இடம்: கோப்பாய்
பிரசுரித்த திகதி: 2013-01-02

கோளாவில் 1, அக்கரைப் பற்றைப் பிறப்பிடமாகவும், பேச்சியம்மன் கோயில் ஒழுங்கை, கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட க. குருநாத பிள்ளை (ஓய்வுபெற்ற லிகிதர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, யாழ்ப்பாணம்) நேற்று (21.12.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி (நல்லையா) மற்றும் அன்னக்கண்டு தம்பதியரின் அன்பு மருமகனும், நவரத் தினதேவியின் (ஓய்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர் பிரதேச வைத்திய சாலை கோப்பாய்) பாசமிகு கணவரும், ஜனகனின் (A/L 2008 கணிதப்பிரிவு யா/ சென்ஜோண்ஸ் கல்லூரி தற்போது லண்டன்) அருமைத் தந்தையும், பொன்னம்பலம், மரகதம், நடராசா, இரத்தினசிங்கம், திருமஞ்சனம், அமராவதி, செல்வராஜா (லண்டன்), மணிமேகலை, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பொன்னம்மா, வடிவேல், கேதாரம், தங்கம்மா, தியாகராசா, கணேசமூர்த்தி, லலிதா (லண்டன்), கிருபாகரன், சுரேந்திரன் (இலங்கை வங்கி, ஒலுவில்), காலஞ்சென்ற நவரத்தினராசா (முன்னாள் தொழில் நுட்ப உத்தியோகத்தர்) மற்றும் நிர்மலா தேவி (உப பீடாதிபதி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி), கிருஸ்ணானந்த மூர்த்தி (ஆஸ்திரேலியா), பாலசறோஜா (ஆசிரிய ஆலோசகர், யாழ்.கல்வி வலயம்), காலஞ்சென்ற ருக்மணி மற்றும் நகுலானந்தசிவம் (கனடா), நகுலானந்த ராஜா (டென்மார்க்), மாலினி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (23.12.2012) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இருபாலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : திருமதி ந. குருநாதபிள்ளை (மனைவி)

தொடர்புகளுக்கு
திருமதி ந. குருநாதபிள்ளை (மனைவி) – பேச்சியம்மன் கோயில் ஒழுங்கை, கோப்பாய் தெற்கு, கோப்பாய். 077 2081 936

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu