Dr. பொன்னையா சத்தியநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 17 நவம்பர் 1948 — இறப்பு : 15 செப்ரெம்பர் 2017
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சத்தியநாதன் அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாள்ஸ் வீரகத்தி பொன்னையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
Dr. மேரி தேவநளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னலோஜனி வேலுப்பிள்ளை சாமுவேல்(அவுஸ்திரேலியா), மனோகரி பூரணம்பிள்ளை(அவுஸ்திரேலியா), லோகநாதன்(லண்டன்), ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
தமிழினத்துக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தொண்டாற்றிய இவர் பழ.நெடுமாறன் அவர்களைத் தலைமையாகக் கொண்ட உலகத்தமிழர் பேரவையின் துணைத்தலைவராகவும், அவுஸ்திரேலியாவில் விக்டோரிய ஈழத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் விளங்கினார்.
தமிழ்ச் சமூகத்தின் ஈடேற்றத்துக்காக முழு மூச்சாக உழைத்து ஓய்ந்த அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வு 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 10:00 மணிமுதல் ந.ப.12:00 மணிவரை Preston Town Hall, 284 Gower St, Preston VIC 3072 எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61488029449