திரு சரவணமுத்து சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
மண்ணில் : 21 ஒக்ரோபர் 1948 — விண்ணில் : 11 ஓகஸ்ட் 2017
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சுந்தரலிங்கம் அவர்கள் 11-08-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சரவணமுத்து கண்மணி தம்பதிகளின் மகனும், கதிரவேலு தங்கம்மா தம்பதிகளின் மருமகனும்,
அன்னபூரணம் அவர்களின் கணவரும்,
ரவிசங்கர், ரவிச்சந்திரன், சுபாநந்தினி, ரவிக்குமார் ஆகியோரின் தந்தையும்,
துரைவீரசிங்கம், மகாலிங்கம், இராசலிங்கம், திருவிலங்கம், கணேசலிங்கம், சியாமளதேவி, சிவலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
மகேஸ்வரி, மல்லிகாதேவி, பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
சுமணா, ஜெயலட்சுமி, பிரதீபன், சானிகா ஆகியோரின் மாமனாரும்,
அனோஜ், வினோஜ், பிரவீனா, பிரியதர்சன், நித்திலா, பிருந்தா, பிரசன்னா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவிசங்கர்(ரவி- மகன்) — இத்தாலி
செல்லிடப்பேசி: +393279537008