திரு யாக்கோப்பு அருளானந்தம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 15 பெப்ரவரி 1928 — இறப்பு : 27 யூலை 2017
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு அருளானந்தம் அவர்கள் 27-07-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யாக்கோப்பு, லூசியா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற அகஸ்ரின், பிரகாசி தம்பதிகளின் மருமகனும்,
கிறிஸ்ரினம்மா(கிளி) அவர்களின் கணவரும்,
அன்னமணி, ஜெயமணி, ஜோர்ஜ் நவநாதன்(பிரான்ஸ்), புனிதமணி(பேபி), ஜெனோரஞ்சினி, காலஞ்சென்றவர்களான கிறேசியன், மதிரமணி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம், அன்னம்மா, இராயப்பு, இராஜேஸ்வரி, மற்றும் ஜோன், இலாசர், சிங்கராயர்(பிரான்ஸ்), இரசிந்தா ஆகியோரின் சகோதரரும்,
மரியநாயகம், ஜேக்கப்(துரை), புனிதமலர்(வளர்மதி), விக்னராஜ்(விக்னா), மகேந்திரன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வட்டக்கச்சியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜோர்ஜ்(மகன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
ஜோர்ஜ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669216830