திரு அல்பிரட் ஜெயராஜ் – மரண அறிவித்தல்




திரு அல்பிரட் ஜெயராஜ் – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 செப்ரெம்பர் 1952 — இறப்பு : 14 யூலை 2017

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் ஜெயராஜ் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை மேரி மாகிறெட் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தர்மலிங்கம், திரவியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மபுத்திரி(இளைப்பாறிய தாதி- அரசினர் வைத்தியசாலை வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி, சரண்யா, ஆதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராணி(ஐக்கிய அமெரிக்கா), பொன்ராஜ்(கனடா), இன்பம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுவாம்பிள்ளை, காமல், பிரான்சிஸ் அருளானந்தம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலகவதி, தர்மகுணநாயகி, தர்மராணி, அபிராமி, வசந்தகுமாரி, தமயந்தி, பிரபாகரன்(கனடா), யசோதா ஆகியோரின் அருமை அத்தானும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இல. 49/12, கோவில் வீதி, குருமன்காடு வவுனியா எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 17-07-2017 திங்கட்கிழமை அன்று வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் பி.ப 03:00 மணியளவில் ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இன்பம் அருள்
தொடர்புகளுக்கு
தர்மபுத்திரி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777275284
இன்பம் — கனடா
தொலைபேசி: +19052949896
பொன்ராஜ் — கனடா
செல்லிடப்பேசி: +16477171622
பிரபா — கனடா
செல்லிடப்பேசி: +14168292556
ராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94769079715

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu