திரு பாலசுந்தரம் பாலசண்முகநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 19 யூன் 1943 — இறப்பு : 30 யூன் 2017
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் பாலசண்முகநாதன் அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம், சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சிவசாமி, சிவகாமசுந்தரி(புங்குடுதீவு 3ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலசரவணபவன், பாலகுகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிதா(லண்டன்), தவபாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வரதராஜன்(லண்டன்), வாணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவநேசன், சிவராசன், காலஞ்சென்ற சிவகுமார், சிவமோகன், புனிதவதி, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயகௌரி, மங்கையற்கரசி, திருவருள் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(தியாகராஜா- கீதா Cafe) பாக்கியலெட்சுமி, மற்றும் தர்மலிங்கம் புஸ்பராணி ஆகியோரின் சம்மந்தியும்,
சாம்பவன், அபிதா, அகரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-07-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.44 A1,
அல்பேட் பிளேஸ்,
தெகிவளை,
கொழும்பு.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணரஞ்சனி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94112731076
வரதராஜன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94767275855
கவிதா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447859163184
தவபாலன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775173248