திரு. சின்னத்தம்பி நித்தியானந்தன் – மரண அறிவித்தல்




திரு. சின்னத்தம்பி நித்தியானந்தன் – மரண அறிவித்தல்

தோற்றம்: 10.10.1955 – மறைவு: 28.05.2017

தாயகத்தில் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியில் பிராங்பேர்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி நித்தியானந்தன் அவர்கள் 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சிவகாமி தம்பதிகளின் கடைசி அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி (கிளி) தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகிர்தராணி (ரதி) அவர்களின் பாசமிகு கணவரும், நிஷானி, நிரோஷன், நிதர்ஷன், நிலக்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நந்தன், கார்த்திகா, வீணா ஆகியோரின் அன்பு மாமனாரும், நுரோன், நிலேன், நுவேன், நேஷான், நதியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும், லட்சுமி (கனடா), கிருஸ்ஆனந்தப்பிள்ளை (கனடா), கிருபானந்தம் (இலங்கை), குணேஸ்வரி (அவுஸ்ரேலியா), சர்வானந்தம் (இலங்கை), நற்குணராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவர் பிராங்பேர்ட் ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலயத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், பிராங்பேர்ட் தமிழ் மன்றத்தின் ஆரம்பகால செயற்குழு உறுப்பினரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 06.06.2017 அன்று Hauptfriedhof Frankfurt am Main இல் 08.30 மணியிலிருந்து பார்வைக்கு வைக்கப்பட்டு 09.30 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

ஈமைக்கிரியைகள் நடைபெறும் இடம்:

Hauptfriedhof
Frankfurt Eckenheimer landstr 194
60320 Frankfurt am Main.

தொடர்புகளுக்கு :
மனைவி 0049152 53760074,
நிஷானி 0049176 30107764,
நிரோஷன் 0049152 54045710,
நிதர்ஷன் 0049176 64982305,
நிலக்ஷன் 0049176 349618,
நந்தன் 0049176 24062515,
கார்த்திகா 0049176 20441958,
வீணா 0049152 10686318.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu