திரு சண்முகம் சிவகுருநாதன் – மரண அறிவித்தல்




sivakurunathanதிரு சண்முகம் சிவகுருநாதன் – மரண அறிவித்தல்

(Former Worker- Chemical Corporation Paranthan)
பிறப்பு : 24 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 4 மே 2017

யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை, யாழ். அச்சுவேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சிவகுருநாதன் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினேஸ்வரி(முன்னாள் அதிபர்- அம்பலவன் பொக்கணை பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி, பாரிந்தன், காலஞ்சென்ற பாமா, பாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, துரைராஜா, மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீகந்தராஜா, தர்சினி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசேஸ்வரி, சிவேஸ்வரி, கணேசமூர்த்தி, யோகேஸ்வரி, விமலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பானுஜா, ஸ்ரீயானி, சிபியா, மகியா, ஜாயூகன், ஷானுகா, பிரதீஜா, அபிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாமினி — பிரித்தானியா
தொலைபேசி: +441494528036
பாரிந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564706090
பாமளா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772719655

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu