திரு செல்லையா இராசா – மரண அறிவித்தல்
(பொலிஸ் திணைக்கள பிரதம லிகிதர்)
பிறப்பு : 9 நவம்பர் 1927 — இறப்பு : 5 மே 2017
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசா அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பசுபதி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், கார்த்திகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா(முரசுமோட்டை அ.த.க பாடசாலை அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
இளங்கோ, காலஞ்சென்ற பாலகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, சிவஞானம், மகேஸ்வரி, இராசநாயகம், மற்றும் திருச்செல்வம், தங்கராசா, காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சடாச்சரம்(பாலு), பஞ்சாட்சரம், மற்றும் தங்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமேஸ், பிரசாந், காலஞ்சென்ற தனுஷான், சங்கவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இளங்கோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94774687584