திருமதி கனகசபை செல்வமணி – மரண அறிவித்தல்
இறப்பு : 12 ஏப்ரல் 2017
யாழ். தம்பசிட்டி தென்னிங்கவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை செல்வமணி அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார், ராஜ்குமார், காலஞ்சென்ற வசந்தகுமாரி, விஜயகுமாரி, சுரேஸ்குமார்(பிரான்ஸ்), சூரியகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பருவதம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சுசிலாதேவி, திருச்செல்வி, கீரன், நக்கீரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுருநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
கஸ்தூரி, மயூரி, துவாரகா, வினேஸ், ராகவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
திவ்வியா, ஹரி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-04- 2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773911846
ராஜ்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773735259
சுரேஸ்குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753477591