திருமதி சுந்தரலட்சுமி துரைராஜா – மரண அறிவித்தல்
இறப்பு : 21 மார்ச் 2017
யாழ். காரைநகர் மூக்கம்பிட்டி கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலட்சுமி துரைராஜா அவர்கள் 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மகாலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா(J.P) அவர்களின் அன்பு மனைவியும்,
திவாகரன், சுலோசனா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 23-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொறளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94772447208