திரு கார்த்திகேசு தில்லைநடேசன் – மரண அறிவித்தல்




theilainadesanதிரு கார்த்திகேசு தில்லைநடேசன் – மரண அறிவித்தல்

(சாமியார்- முன்னாள் உபதபாலதிபர், திருக்கேதீச்சரம், மன்னார்)
மலர்வு : 8 ஏப்ரல் 1930 — உதிர்வு : 15 பெப்ரவரி 2017

யாழ். மீசாலை மேற்கு கார்த்திகேசு வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சாவகச்சேரி பெரியரசடியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தில்லைநடேசன் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார். காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(உபாத்தியார்) நாயகம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜலட்சுமி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

முருகதாசன்(மதுவரி உத்தியோகத்தர்- பருத்தித்துறை) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராசலிங்கம்(ஆசிரியர்), இரத்தினபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிர்மலா(ஆசிரியை- யாழ். உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமனாரும்,

இரத்தினம்மா(மீசாலை), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(ஆசிரியர்), திலகவதி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகதீசன்(பிரான்ஸ்), ரோகினி(ஆசிரியை- இலங்கை), ஜெயக்குமார்(கனடா), ஜெயபாலன்(கனடா), ஜெயபரன்(கனடா), சித்திரா(கனடா), புஸ்பமலர்(இலங்கை), லில்லிமலர்(ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெகநாதன், விமலநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,

காலஞ்சென்ற நமசிவாயசேயோன் அவர்களின் அன்பு மாமனாரும்,

விஷ்ணுகா, கம்சிகா, சரணிகா, ஆரணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பெறாமக்கள்
தொடர்புகளுக்கு
முருகதாசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777178069
ஜெகதீசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651001105
ரோகினி — இலங்கை
தொலைபேசி: +94213217158
ஜெயக்குமார் — கனடா
தொலைபேசி: +14165580800
ஜெயாபாலன் — கனடா
செல்லிடப்பேசி: +15146551982
ஜெயபரன் — கனடா
தொலைபேசி: +14165581419
சித்திரா — கனடா
தொலைபேசி: +14166301455

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu