திரு குணசிங்கம் அம்பிகைச்செல்வன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 31 யூலை 1984 — இறப்பு : 9 சனவரி 2017
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி நாவலர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் அம்பிகைச்செல்வன் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குணசிங்கம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்ற கணேசலிங்கம், சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமிழினி அவர்களின் அன்புக் கணவரும்,
காவியா அவர்களின் அன்புத் தந்தையும்,
சுமித்திரா, நர்மதா, பங்கயற்செல்வன், காலஞ்சென்ற அருந்தவச்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சீருஜா, கீர்த்தன், தர்மினி, தர்சிகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தமிழ்ச்செல்வி, தமிழ்மாறன், தமிழ்ச்செல்வன், தமிழரசி, சிவகுமார், ரவிதாசன், அஜந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுமிதா, மாதுளன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
ரஜீவ் ஆனந்த் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 306/7,
நாவலர் வீதி,
ஆனைப்பந்தி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779623745
சிவகுமார் சுமித்ரா(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41789108807
சகலன் — ஜெர்மனி
தொலைபேசி: +499114782616