பெயர் : குமாரசாமி பாக்கியம்
பிறப்பு :
இறப்பு : 2013-05-08
பிறந்த இடம் : ஏழாலை
வாழ்ந்த இடம் : ஏழாலை
பிரசுரித்த திகதி : 2013-06-10
ஏழாலை வடக்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பாக்கியம் (08.05.2013) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பிசின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சீதேவன் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும், பூபாலசிங்கம், அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், பாக்கியநாதன் மற்றும் குமாரகுலசிங்கம், இராசகுலசிங்கம், தனபாலசிங்கம், குணசிங்கம், பாஸ்கரதேவி ஆகியோரின் அன்புத் தாயும், அன்னலட்சுமி, காலஞ்சென்ற யோகசுந்தரம் மற்றும் இந்திரா, கமலாதேவி, ருக்குமணி, மாலினி, றயனி, கௌரி, சண்முகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும், தம்பிராசா, தம்பிஐயா, தர்மலிங்கம், வீரசிங்கம், காலஞ்சென்ற அருளம்பலம் மற்றும் அன்னம் (சீனியம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.05.2013) ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் ஒரு மணியளவில் தகனக்கிரியைக்காக உசத்தியோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – கலாநிதி வீதி, ஏழாலை வடக்கு, ஏழாலை. ,