பெயர் : திருமதி தனபாக்கியம் நவரட்ணம்
பிறப்பு : –
இறப்பு : 2012-12-30
பிறந்த இடம் : ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம் : ரொறன்ரோ
பிரசுரித்த திகதி : 2013-01-03
ஊர்காவற்துறை, கரம்பொன்கிழக்கு, ஒழுவில் வீதியைப் பிறப்பிடமாகவும் கனடா, ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியம் நவரட்ணம் 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கரம்பொன் நாகலிங்கம் சீதேவிப் பிள்ளை தம்பதியரின் புதல்வியும் காலஞ்சென்றவர்களான உடுவிலைச்சேர்ந்த செல்லையா பொன்னம்மா தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும் சிவகாந்தன் (அமெரிக்கா), காலஞ்சென்ற சந்திரகாந்தன் மற்றும் அஜந்தா (கனடா), ஜயந்தா (கனடா), சுகந்தா (கனடா), விஜிதா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயும் காலஞ்சென்றவர்களான இராசதுரை, மார்க்கண்டு, இராஜரட்ணம் மற்றும் மங்கையர்க்கரசி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்று (03.01.2013) வியாழக்கிழமை கனடாவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.