திரு சின்னத்தம்பி சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்




sennathampiதிரு சின்னத்தம்பி சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்

(ஓய்வுநிலை அதிபர்- விக்கினேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி)
இறப்பு : 25 செப்ரெம்பர் 2016

யாழ். கரவெட்டி துன்னாலை அத்துளு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி துன்னாலை மேற்கு பள்ளம் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிதம்பரநாதன் அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற முருகேசு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலைமகள்(லண்டன்), ஐங்கரன்(லண்டன்), திருமகள்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கண்ணகை, சிவபாக்கியம், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சின்னம்மா, சிற்றம்பலம்(ஓய்வுநிலை அதிபர்- நெல்லியடி ம.ம.வி), கந்தப்பு(லண்டன்), தாமோதரம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவநாதன்(லண்டன்), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வராணி, ஆனந்தநடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வம்சி கிருஷ்ணா, ஆர்த்திகா, மிதுஷா, லக்ஸ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திலகராணி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212261895
சிவநாதன்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441206683469
பார்த்தீபன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14162008383

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu