திரு பிலிப் தர்மநாயகம் – மரண அறிவித்தல்
(T.A- ஓய்வுபெற்ற நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளர்)
தோற்றம் : 12 ஓகஸ்ட் 1947 — மறைவு : 29 யூலை 2016
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் தர்மநாயகம் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப், சிசிலியா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஆசீர்வாதம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோசபின் புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிதன், தர்சிகா, பெனி, மனெக்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மரியமுத்து, இராசநாயகம், லலிதா அரியநாயகம், செல்வநாயகம், மற்றும் ராஜேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகன், டயானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரியநாயகம், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், இரத்தினாவதி, குலநாயகம், துரைராஜா, லூர்த்தம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜேசன், ஆத்மிகா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 01-08-2016 திங்கட்கிழமை அன்று கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கரவெட்டி கீரிப்பல்லி சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94777779867
செல்லிடப்பேசி: +94772274464