திரு பொன்னம்பலம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்




ponnuththuraiதிரு பொன்னம்பலம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்

(சின்னப்புவின் மாணக்கன், அ.பொ. பொன்னுத்துரை)
பிறப்பு : 17 மே 1943 — இறப்பு : 14 யூலை 2016

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பொன்னுத்துரை அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், தங்கமுத்து தம்பதிகளின் புதல்வரும்,

விக்னேஸ்வரி அவர்களின் கணவரும்,

சந்திரகுமார், சிவகுமார், காலஞ்சென்ற உதயகுமார், விஜித்தா, கவிதா ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற கண்மணி அவர்களின் சகோதரரும்,

சங்கர், சிவகுமாரி, றஞ்சன், கஜலி ஆகியோரின் மாமனாரும்,

கிருத்திகா, சதுஸ்டன், அனு பிரேமிக்கா, நேமிக்கா, ஆத்மிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பிப்பிலி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரகுமார்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
சந்திரகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783724216
சிவகுமார் — பிரித்தானியா
தொலைபேசி: +442034908223

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu