திரு பணிக்கன் மயில்வாகனம் – மரண அறிவித்தல்
(முன்னாள் பஸ் நிலைய பொறுப்பதிகாரி- இ.போ.ச, மட்டக்களப்பு, கிழக்கிலங்கையின் புகழ் சித்தாண்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வண்ணக்கர், சமாதான நீதவான்)
மலர்வு : 3 மே 1944 — உதிர்வு : 14 யூலை 2016
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பணிக்கன் மயில்வாகனம் அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பணிக்கன் பார்வதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான திருச்செல்வராஜா அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செபமாலை மேரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மதிவதனன், தெய்வேந்திரராஜா, காலஞ்சென்ற தயாளினி, சதீஸ்குமார், சுதாகரன், பகீரதன், சப்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94652223315
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792402447
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615588363