செல்வி தெய்வமலர் இராமலிங்கம் – மரண அறிவித்தல்




theivamalarசெல்வி தெய்வமலர் இராமலிங்கம் – மரண அறிவித்தல்

(செங்கல்பட்டு இராமகிருஸ்ண மடத்தில் இறைபணியாற்றியவர்)
பிறப்பு : 8 செப்ரெம்பர் 1942 — இறப்பு : 5 யூலை 2016

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், இந்தியா செங்கல்பட்டு இராமகிருஸ்ண மடத்தை வதிவிடமாகவும் கொண்ட தெய்வமலர் இராமலிங்கம் அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

விசாகப்பெருமாள்(கொழும்பு), பேரின்பநாயகம்(கொழும்பு), பாலா(பிரான்ஸ்), பத்மா(லண்டன்), காலஞ்சென்ற தெய்வேந்திரன், மகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பேரானந்தம், சத்தியா, மற்றும், மரிச்சா(பிரான்ஸ்), சிறீராஜா(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஒமேஷா(லண்டன்) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

லக்ஷ்மி(கனடா), சுமங்களா(கொழும்பு), தொமஸ்(பிரான்ஸ்), தேவிகா(பிரான்ஸ்), டேவிட்(பிரான்ஸ்), அலக்ஸ்(பிரான்ஸ்), ஜெரமி(பிரான்ஸ்), மேகலன்(லண்டன்), பிரீத்தி(லண்டன்), ஐங்கரன்(கொழும்பு), பிரவீன்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு அத்தையும்,

பிறையன், கெவின், அனுக்கிரகதா, லிக்கி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2016 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு இராமகிருஸ்ண மட ஆசிரமத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் செங்கல்பட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. ஆசிரம விதிமுறைப்படி அவரது அஸ்தி 07-07-2016 வியாழக்கிழமை அன்று காலை மகாபலிபுரம் கடலில் கலக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகேந்திரன்
தொடர்புகளுக்கு
மகேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084291705

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu