திரு சுப்ரமணியம் அற்புதராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு : 15 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 13 யூன் 2016
மட்டக்களப்பு வாழைச்சேனையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Vardø, Bergen, Sanvika ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் அற்புதராஜா அவர்கள் 13-06-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெருமாள்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலேந்திரா தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தன், துர்காயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பேரின்ப நாயகி(இலங்கை), யோகராணி(இலங்கை), நேசராஜா(லண்டன்), சுகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி ஜெயபிரகாஷ்(நோர்வே), மகேந்திரவர்மன், மங்களவாணி, மஞ்சுளாதேவி, சியாமளாதேவி, சிவஞானேந்திரன், கேதீஸ்வரி, மங்களேஸ்வரி, குகனேஸ்வரி(நோர்வே- குகா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செளந்தராஜன்(நோர்வே)
தொடர்புகளுக்கு
செளந்தராஜன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4792292358
நேசராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983981104
ஜெயபிரகாஷ் — நோர்வே
தொலைபேசி: +4797784322