திருமதி இரங்கநாதன் நாகேஸ்வரி – மரண அறிவித்தல்




nagesvaryதிருமதி இரங்கநாதன் நாகேஸ்வரி – மரண அறிவித்தல்

மலர்வு : 12 ஓகஸ்ட் 1941 — உதிர்வு : 4 மே 2016

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட இரங்கநாதன் நாகேஸ்வரி அவர்கள் 04-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

இரங்கநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தகுமார்(ஜெர்மனி), வசந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினலைலா, சோதிராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற உமாமகேஸ்வரி, சந்தானலக்சுமி, சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான ரகுநாதன், ராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவிந், லக்‌ஷன், மிதுஷன், அருண்யா, லக்சிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சோமராம் தோட்டம், உடுவில் கிழக்கு, சுன்னாகம் என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பூ ஓடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மோகன்(ஜெர்மனி)
தொடர்புகளுக்கு
மோகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94785476577
வசந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442089742331

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu