திருமதி கமலாம்பிகை துரையப்பா – மரண அறிவித்தல்




kamalampikaiதிருமதி கமலாம்பிகை துரையப்பா – மரண அறிவித்தல்

தோற்றம் : 31 ஓகஸ்ட் 1931 — மறைவு : 18 பெப்ரவரி 2016

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை துரையப்பா அவர்கள் 18-02-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரவதனம், கருணானந்தமூர்த்தி, தர்மானந்தசிவம், சத்தியபாமா, காலஞ்சென்ற அருளானந்தசிவம், சச்சிதானந்தசிவம், ஜெனானந்தசிவம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இல. 160/3, திருவையாறு, கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரவி(மகன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94774910881
— — பிரான்ஸ்
தொலைபேசி: +33953043863
செல்லிடப்பேசி: +33781573046

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu