திரு தவராசா குபேரன் – மரண அறிவித்தல்
(யாழ் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன்)
பிறப்பு : 29 ஒக்ரோபர் 1994 — இறப்பு : 30 நவம்பர் 2015
யாழ். வடமராட்சி கிழக்கு வேம்படியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புற்றளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவராசா குபேரன் அவர்கள் 30-11-2015 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதிகள், செல்வராசா, மற்றும் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தவராசா(கிராமசேவகர்) அம்பிகாவதி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற குகேசன், மற்றும் குணேசன், குகாஜனன், குகாயினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று புற்றளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775045755
நித்தியானந்தம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777140187
நாகலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777005596