திரு காசிப்பிள்ளை கனகசபை – மரண அறிவித்தல்
இறப்பு : 23 ஒக்ரோபர் 2015
யாழ். காரைநகர் களபூமி இராசாந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் விளானையை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கனகசபை அவர்கள் 23-10-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(லண்டன்), லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, பத்மநாதன், நவரத்தினம், காலஞ்சென்ற தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணராசா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகசுந்தரம், சரஸ்வதி, சுப்பிரமணியம், சிவபாலன், காலஞ்சென்ற தவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிசா, யசிந்தன், சஜிந்தன், றஜிந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சசிகலா(மகள்- லண்டன்)
தொடர்புகளுக்கு
மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447772654077
மருமகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447582277554