திரு குமாரு சின்னத்தம்பி – மரண அறிவித்தல்




kumaru
திரு குமாரு சின்னத்தம்பி – மரண அறிவித்தல்

பிறப்பு : 11 பெப்ரவரி 1927 — இறப்பு : 5 மே 2015

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு சின்னத்தம்பி அவர்கள் 05-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு இத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மநாயகி(ஆத்தை) அவர்களின் பாசமிகு கணவரும்,

முகுந்தன், காலஞ்சென்ற அனந்தன், சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, முத்தையா, செல்லமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆதாயராருகா(ருகா), கிரிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகரத்தினம், தெய்வானைப்பிள்ளை, செல்லம்மா, காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஷன், அபிசன், மதுஷன், அபிமன்யு, அனந்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முகுந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442088422966
செல்லிடப்பேசி: +447534517972
சயந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41523433380
செல்லிடப்பேசி: +41786836797
ருகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447508056075
கிரு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788168538

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu