திரு வேலாயுதபிள்ளை ஈஸ்வரன்பிள்ளை(ஈஸ்வரன்) – மரண அறிவித்தல்




velayaiதிரு வேலாயுதபிள்ளை ஈஸ்வரன்பிள்ளை(ஈஸ்வரன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 11 பெப்ரவரி 1949 — இறப்பு : 29 ஏப்ரல் 2015

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஈஸ்வரன்பிள்ளை அவர்கள் 29-04-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தா, கபிலன், ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஜீவன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெஸ்மீதா, ஜீத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கபிலன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +614329467000
மங்கையற்கரசி — நியூஸ்லாந்து
தொலைபேசி: +6496206524
பிருந்தா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768585634

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu