திரு கணபதிப்பிள்ளை நமசிவாயம் – மரண அறிவித்தல்
இறப்பு : 20 ஏப்ரல் 2015
யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
மகாதேவன்(சிவம்), சிறிவாமதேவன்(கனடா), சகாதேவன், இரத்தினேஸ்வரி, வாமதேவன்(சுவிஸ்), இராஜேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பரமசாமி, மகாலட்சுமி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, வசந்தாதேவி(கனடா), சரோஜாதேவி, காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன், சாரதா(சுவிஸ்), சிவரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, அப்பாச்சாமி, நாகரெத்தினம், சீவரெத்தினம், தர்மலிங்கம், வேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்தினி, கமலினி, பிரேமலா, சுயேந்தினி(கனடா), மயூரன், கவிசங்கர், தீபிகா, பவிசங்கர்(கனடா), சுகன்யா, யசோதரன்(கனடா), கமலதர்சன்(லண்டன்), சங்கீதா, டினேஸ்(பிரான்ஸ்), பிரசாந்த், சாளினி, சுகன்யா, வினோஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மோனிஷா, கிஷான், கபிஷன், அபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
துவாளி வீதி,
இமையாணன் மேற்கு,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212263358