திரு கிருஸ்ணபிள்ளை செல்வராசா – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 14 ஒக்ரோபர் 1949 — ஆண்டவன் அடியில் : 19 ஏப்ரல் 2015
யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்கள் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி தர்மலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலங்கைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், ஜெசிந்தன், காலஞ்சென்ற தனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பூங்காவனம், விசுவலிங்கம், இராஜலிங்கம்(சுவிஸ்), லலிதராணி, ஜெயராணி, சரோஜினிதேவி, சுகிர்தராணி(சுவிஸ்), பாலேஸ்வரி(பிரான்ஸ்), பத்மாவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்ஷனா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், இராஜேஸ்வரி, மற்றும் அம்பிகாதேவி(சுவிஸ்), பத்மநாதன், நடனசபேசன், காலஞ்சென்ற சிவபாலசுந்தரம், நகுலன்(சுவிஸ்), ஜெயச்சந்திரன்(பிரான்ஸ்), இரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சற்குருராஜ் இராஜலிங்கம்
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791327337