திருமதி சிவபாக்கியம் குமாரசாமி – மரண அறிவித்தல்
இறப்பு : 11 ஏப்ரல் 2015
யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் குமாரசாமி அவர்கள் 11-04-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி, சிவசுப்பிரமணியம், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானபோதன், ஜெயசக்தி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபரமானந்தன் சுகந்தி, தனஞ்சயன் றிஸா, ஜெயக்குமார் சுகன்யா, கிருபாகரன் சுஜித்தா, றாம்நாத் ஈதா, பிரியதர்சன், பிரதீபன் ஹேமப்பிரியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தர்ஷி, யாழினி, ஹேசிதா, நிதுஷாரன், பிருந்தவி, தூறா, லிவ, டிராகவன், ஏவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜசோ — கனடா
தொலைபேசி: +14162930106
ஜெயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776306120