திரு வினாசித்தம்பி சண்முகராஜா – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற தேயிலை ஆராய்ச்சியாளர்- T.R.I)
தோற்றம் : 22 யூன் 1945 — மறைவு : 7 ஏப்ரல் 2015
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி சண்முகராஜா அவர்கள் 07-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பதுமநிதி(நிதி- இளைப்பாறிய ஆசிரியை, கொழும்பு இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜேந்திரா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 09-04-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரசன்னா(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94112553017
செல்லிடப்பேசி: +94776203960