பெயர்: முத்து கந்தவனம்
பிறப்பு: –
இறப்பு: 2013-01-01
பிறந்த இடம் :தேவரையாளி
வாழ்ந்த இடம்: அரியாலை
பிரசுரித்த திகதி: 2013-01-02
தேவரையாளியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்து கந்தவனம் நேற்று (01.01.2013) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்து பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புக்கணவரும், சண்முகலிங்கத்தின்(செட்டி) தந்தையும், மனோரஞ்சிதத்தின் (கிளி) மாமனும், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சிவக்கொழுந்து, அலங்காரம், தங்கம்மா, செல்லம்மா, சின்னத்தங்கம் மற்றும் தங்கவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னையா, அப்புத்துரை மற்றும் மகேஸ்
வரி ஆகியோரின் மைத்துனரும், கௌரிகாசன் சர்மிலா, சபேசன், அனோஜா, ஜெயசுதன் பிரியந்தி (தீபா) ஆகியோரின் பேரனும், அக்ஷயன், ஆர்த்திகன், அக்ஷயா, சர்சிகன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.01.2013) புதன்கிழமை மு.ப 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 34, கனகரத்தினம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.