திரு லுக்கேஸ்பிள்ளை மருசலின் – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய ஆசிரியர்)
மண்ணில் : 27 யூன் 1928 — விண்ணில் : 20 மார்ச் 2015
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும் கொண்ட லுக்கேஸ்பிள்ளை மருசலின் அவர்கள் 20-03-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லுக்கேஸ்பிள்ளை, பிரகாசியம்மா(அளவெட்டி) தம்பதிகளின் இளைய மகனும்,
காலஞ்சென்ற திரேசா தவமணி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அருமைக் கணவரும்,
அன்ரன் லூக்(கனடா), றதினி(பிரான்ஸ்), மாலினி(நோர்வே), காலஞ்சென்ற சுலோஜினி, வதனி(பிரான்ஸ்), றாகினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அன்னம்மா, திருச்செல்வம், ஞானப்பிரகாசம், கருணதாஸ், ஞானரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவா, டயா, றொபர்ட், மோகன், நிகேதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, செல்லம்மா, பெலிசிற்றஸ், காலஞ்சென்றவர்களான பற்றிக், ஜெயமணி, மற்றும் துரைராஜா, றோஸ் மாகிறட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யூடித், ஜோசப், பியோ, பியா, சில்வன், டயானா, ப்றீடா, ரோனி, கொலின், பெப்பெற்ஜீவா, மெல்வின், சுவாதிகா, நிரோஷிகா, சுலோஜிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 24-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் சூராவத்தை புனித திரேசம்மா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஏழாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
”சமாதானத்தில் இளைப்பாறுவாராக”
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
செல்லிடப்பேசி: +94774293570
றதினி கோபாலசிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611143705