கதிர்காமு காராளசிங்கம் – மரண அறிவித்தல்




Katirkamu karalacinkam
பெயர் : கதிர்காமு காராளசிங்கம்
பிறப்பு :
இறப்பு : 2013-02-22
பிறந்த இடம் : கரவெட்டி
வாழ்ந்த இடம் : அச்சு வேலி
பிரசுரித்த திகதி : 2013-02-23

கரவெட்டி கிழக்கு,யாக்கருவைப் பிறப்பிடமாகவும் சந்நிதி வீதி, பத்தமேனி, அச்சு வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு காராளசிங்கம் நேற்று (22.02.2013) வெள்ளிக் கிழமை இறைபதமெய்தினார்.

அன்னார் யாக்கருவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கதிர்காமுபார்வதி தம்பதி யரின் மூத்த புதல்வனும், ஆவரங்கால், 10ஆம் கட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற வர்களான சிதம்பரப்பிள்ளைபுதியாத்தை தம்பதியரின் மருமகனும் இளையபிள்ளையின் பாசமிகு கணவரும், இலட்சுமி (சின்னமணி யாக்கரு), சுப்பிரமணியம் (வவுனியா), காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர்,பத்தமேனி) கந்தசாமி (நுணாவில்) மற்றும் சின்னப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர்), மார்க்கண்டு (ஓய்வுநிலை அஞ்சல் அதிபர் கொழும்பு), காலஞ்சென்ற கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும், செல்வயோகம், வாமளாதேவி (லண்டன்), அற்புதராசா (லண்டன்), மாலினி (லண்டன்), தபோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராசரத்தினம் (கரவெட்டி அஞ்சல் அலுவலகம்), பாலேஸ்வரன் (லண்டன்), திருச்செல்வி (லண்டன்),தவராசா (லண்டன்), பகீரதன் (உள்ளூராட்சி அமைச்சு வட.மா), ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற ஐயாத்துரை மற்றும் பொன்னையா (ஓய்வுநிலை ஆசிரியர்யாக்கரு), கந்தசாமி (ஆவரங்கால்), கண்மணி (ஓய்வுநிலை ஆசிரியர்பத்தமேனி), கனகாம்பாள் (வவுனியா), லீலாவதி (நுணாவில்), சறோஜினிதேவி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும், லண்டனைச் சேர்ந்த ஜனனி, ஜாவாகினி, சுஜானி, டெசியா, அஜன், பிரவீன், தருண் மற்றும் சுபீட்சன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.02.2013) சனிக்கிழமை மு.ப.10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பத்தமேனி, தீர்த்தாங்குளம், உள்ளிவிராய் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – 145,சந்நிதி வீதி, அச்சுவேலி. , 021 300 8694.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu