திரு சிவபாதசுந்தரம் சின்னத்தம்பி – மரண அறிவித்தல்




sivapathasundram திரு சிவபாதசுந்தரம் சின்னத்தம்பி – மரண அறிவித்தல்
(Retired Assistant Collector of Customs)

பிறப்பு : 25 ஏப்ரல் 1929 — இறப்பு : 16 பெப்ரவரி 2015

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் சின்னத்தம்பி அவர்கள் 16-02-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற இலகுப்பிள்ளை, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரதிதேவி, ரவீந்திரன், சிவேந்திரன்(சுட்டி), ஜானகிதேவி(ஜெனா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பூபாலசிங்கம், கனகசபாபதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீஸ்கந்தராஜா(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சென்.ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்), கலைவாணி, விஜயகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வாமதேவன், காலஞ்சென்ற சீனிவாசகம், இரத்தினாவதி, காலஞ்சென்ற மகேஸ்வரி, கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திகன், கஜந்தன், நிருஜன், லஷ்மி, வினோஜா, பவித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தியானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரதிதேவி — இலங்கை
தொலைபேசி: +94212255115
ரவீந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085514595
சிவேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442088638109

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu