திருமதி செளந்திரேஸ்வரி தெய்வேந்திரம்(ராணி) – மரண அறிவித்தல்




sowthereswari திருமதி செளந்திரேஸ்வரி தெய்வேந்திரம்(ராணி) – மரண அறிவித்தல்

இறப்பு : 10 பெப்ரவரி 2015

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செளந்திரேஸ்வரி தெய்வேந்திரம் அவர்கள் 10-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பூலோகநாயகி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஷ்(லண்டன்), ரமேஷ்(லண்டன்), சிவதீபனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ராசசேகரம், செல்வசேகரம், மற்றும் ஜெயஞானசேகரம்(வவுனியா), தேவன், காலஞ்சென்ற யோகேஸ்வரி, மங்களேஸ்வரி(ஒட்டுசுட்டான்), கோகிலேஸ்வரி, பானுமதீஸ்வரி, சிவசேகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிறேமலதா, வினிதா, சிவலோஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தங்கராசா, விஜயலட்சுமி, ராசரெத்தினம்(சின்னத்தம்பி), வில்வராசா ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் புதுக்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுரேஷ், ரமேஷ்
தொடர்புகளுக்கு
சுரேஷ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768467012
– — பிரித்தானியா
தொலைபேசி: +442036200889

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu