திரு முருகேசு இலட்சுமணப்பிள்ளை – மரண அறிவித்தல்
பிறப்பு : 4 ஓகஸ்ட் 1942 — இறப்பு : 1 பெப்ரவரி 2015
யாழ். காரைநகர் கோவளம் மெலிஞ்சி ஓடையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு இலட்சுமணப்பிள்ளை அவர்கள் 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரத்தினம்(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
திருக்குமரன், செல்வக்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகராஜா, மகாதேவன், சர்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி, காயத்ரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, கணேசபாக்கியம், கணேசன், Dr.ஆனைமுகன், பராசக்தி, கங்காதேவி, மகேஸ்வரி, ஞானேஸ்வரி, விக்கினேஸ்வரி, சிவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷா, சந்தோஷ், ஆராதனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 வரையும், 04-02-2015 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரையும் மற்றும் 05-02-2015 வியாழக்கிழமை அன்றும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 49,
2/1 கொலின்வூட் பிளேஸ்,
வெள்ளவத்தை,
கொழும்பு.
தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94773492361