அமரர் நாகம்மா சொக்கலிங்கம் – 31ம் நாள் நினைவஞ்சலி




nagamma அமரர் நாகம்மா சொக்கலிங்கம் – 31ம் நாள் நினைவஞ்சலி

பிறப்பு : 10 மார்ச் 1924 — இறப்பு : 6 சனவரி 2015

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா சொக்கலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னாரின் மரணச் செய்தி அறிந்து நேரில் வந்தோருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஒரு திங்கள் ஓடி மறைந்ததுவோ
ஆச்சி நீ எங்களை விட்டுச் சென்று
ஓராயிரம் திங்கள் ஓடி மறைந்தாலும்
என்றும் நாம் உன்னையே தேடுகின்றோம்

ஆச்சி நீ வளர்த்த குஞ்சுகளுக்கு நல்வாழ்வு
தந்து விட்ட நிம்மதியில் தான்
நீ மீளாத் துயில் கொண்டாயோ

ஆச்சி உன் வளர்ப்பில் ஒரு தாயை நாம்
இனி எப்பிறப்பில் காண்போமோ
என்றும் உனது அன்பு முகம்
அழியாத ஓவியமாக
எங்கள் மனதில் நிலைத்திருக்கும்

விழிகளை நீர் நனைக்க என்றும் ஆச்சி
உன் நினைவுகளுடன் வாழ்ந்திடுவோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்
சந்திரசேகரன் குடும்பம்

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

தகவல்
சந்திரசேகர்
தொடர்புகளுக்கு
சாந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651433767

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu